கிரிவலம் .. சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
By: vaithegi Mon, 31 July 2023 1:43:39 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அமைந்து உள்ள உலக பிரசித்திபெற்ற அக்னி ஸ்தலமான அருணாச்சலேஸ்வரர் கோயிலில் , ஒவ்வொரு மாதம் பௌர்ணமி நாளன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமான ஒன்று.
கோயிலுக்கு பின்புறம் அமைந்து உள்ள, சிவபெருமானின் வடிவமாக கருதப்படும் மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அந்தவகையில் சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீப விழாக்கள் விசேஷமாக கொண்டாடப்படும்.
இந்த நிலையில் நாளை ஆடி பௌர்ணமி ஆகும். இதனையொட்டி வெளியூர் பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எனவே அதன்படி நாளை மாளை 3, 4, 5 மணிக்கு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளும், அதேபோன்று வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாலை 3, 4, 5 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. tnstc.in என்கிற இணையதளம் மற்றும் tnstc app மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.