- வீடு›
- செய்திகள்›
- கிறிஸ்துமஸ் பண்டிகை ... சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகை ... சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
By: vaithegi Fri, 23 Dec 2022 09:24:59 AM
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பண்டிகை நாட்களில் சென்னை உள்பட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
கிறிஸ்துமஸ் ஞாயிற்றுக்கிழமையில் வருவதாலும், தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி கொண்டு வருகின்றனர். எனவே மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.
இதையடுத்து இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது.
எனவே இந்த அறிவிப்பின் படி, வரும் வெள்ளிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை 300 சிறப்பு பேருந்துகளும் சென்னையில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.