Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் நாளை முதல் வருகிற 23-ந்தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன

சென்னையில் நாளை முதல் வருகிற 23-ந்தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன

By: vaithegi Thu, 20 Oct 2022 09:13:13 AM

சென்னையில் நாளை முதல் வருகிற 23-ந்தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன

சென்னை: சிறப்பு பஸ்கள் இயக்கம் ...... தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூர், வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதனை அடுத்து தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 23-ந்தேதி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

chennai,special buses,diwali ,சென்னை,சிறப்பு பஸ்கள் ,தீபாவளி

அதற்காக சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தம் 10,518 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,888 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 3,062 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல ஊர்களுக்கு 3,790 சிறப்பு பஸ்கள் என்று மொத்தமாக 13,152 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

Tags :