தமிழகத்தில் ஜூன் 4 & 5ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
By: vaithegi Sun, 04 June 2023 12:20:19 PM
சென்னை: தமிழகம் முழுவதும் வருகிற ஜூன் 7ம் தேதி அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கோடை வெப்பம் அதிகமாக இருந்த காரணத்தினால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அதற்கு முந்தைய வார இறுதி நாட்களான வருகிற ஜூன் 4ம் தேதி அதிக அளவிலானவர்கள் சொந்த ஊர்களிலிருந்து இருப்பிடங்களுக்கு திரும்புவார்கள்.
இதனால் பேருந்துகளில் வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். எனவே தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து, மற்ற தமிழக மாவட்டங்களுக்கும், மற்ற தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு மொத்தம் 250 பேருந்துகளும், திருச்சியில் இருந்து மற்ற ஊர்களுக்கு 150 சிறப்பு பேருந்துகளும் என்று மொத்தம் ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.