Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மாநகராட்சி சார்பில் சொத்துவரியை செலுத்த இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சி சார்பில் சொத்துவரியை செலுத்த இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

By: vaithegi Sat, 08 Apr 2023 10:50:30 AM

சென்னை மாநகராட்சி சார்பில் சொத்துவரியை செலுத்த இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

சென்னை : சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் 15-ம் தேதிக்குள் அரையாண்டுக்கான சொத்துவரியை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.

இதனை அடுத்து காசோலை, கடன் அட்டை சொத்து வரியை, சொத்து உரிமையாளர்கள் செலுத்த பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலமான ஏப்.6-ம் தேதி வரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 662 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர்.

property tax,chennai corporation ,சொத்துவரி,சென்னை மாநகராட்சி

எனவே இதை ஊக்குவிக்கும் பொருட்டு, பெரும்பான்மையான சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரியை எளிதாக செலுத்த மாநகராட்சி சார்பில் சொத்துவரி வசூல் சிறப்பு முகாம்கள் வார இறுதி நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.

எனவே அதன்படி இன்றும், நாளையும் தலா 170 இடங்களில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, காசோலை, கடன் மற்றும் பற்று அட்டை மூலம் சொத்துவரி வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tags :