Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு

மகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு

By: vaithegi Fri, 07 Oct 2022 4:14:59 PM

மகாராஷ்டிராவில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு

மகாராஷ்டிரா: ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகுப்பு .... தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பை வழங்கியது. அதில் அரிசி, பருப்பு, வெல்லம், சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் வைக்க தேவையான பொருட்களும் மற்றும் பிற மளிகை பொருட்கள் என 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த திட்டம் தமிழகம் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பாராட்டை பெற்றது. அதை தொடர்ந்து வரும் அக்.24ம் தேதி கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

special prize pack,ration card holder ,சிறப்பு பரிசுத்தொகுப்பு,ரேஷன் அட்டைதாரர்

அந்த மாநில ரேஷன் கடைகள் வாயிலாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ ரவை, நிலக்கடலை, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து இது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது முடிவு செய்யப்பட்டு இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக அம்மாநில அரசு ரூ. 513 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.எனவே இதன் மூலம் 1.5 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :