Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசு

மகாராஷ்டிராவில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசு

By: vaithegi Mon, 09 Oct 2023 12:09:46 PM

மகாராஷ்டிராவில் தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசு


மகாராஷ்டிரா: இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் வாயிலாக தற்போது மத்திய அரசு சார்பாக மாதந்தோறும் 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு கொண்டு வருகிறது.

மேலும் அத்துடன் அரசின் பல்வேறு நல திட்டங்களும் ரேஷன் அட்டைகளின் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு சிறப்பு பரிசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

special prize,ration card holder,diwali,maharashtra ,சிறப்பு பரிசு ,ரேஷன் அட்டைதாரர்,தீபாவளி,மகாராஷ்டிரா

அதாவது ரூ.100 க்கு 1 லிட்டர் சமையல் எண்ணெய், ரவை அரை கிலோ, சனா பருப்பு, மாவு மற்றும் அவல் ஆகியவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து வருகிற அக். 25 முதல் நவ.30ஆம் தேதி வரை பொருட்கள் வழங்கப்படவுள்ளது. இதையடுத்து இத்திட்டத்திக்காக அரசு ரூ. 530 கோடியை ஒதுக்கீடு செய்து உள்ளது.

Tags :
|