Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தஞ்சை ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் ஓட்டலில் சிறப்பு சலுகை ... முதல் 75 நபர்களுக்கு , 75 பைசாவுக்கு பிரியாணி

தஞ்சை ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் ஓட்டலில் சிறப்பு சலுகை ... முதல் 75 நபர்களுக்கு , 75 பைசாவுக்கு பிரியாணி

By: vaithegi Mon, 15 Aug 2022 3:55:36 PM

தஞ்சை ரெயில் நிலையம் அருகே ஒரு தனியார் ஓட்டலில் சிறப்பு சலுகை ...   முதல் 75 நபர்களுக்கு , 75 பைசாவுக்கு பிரியாணி

தஞ்சாவூர்: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவாக இன்று பெரும் உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை அடுத்து இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்.

biryani,private hotel ,பிரியாணி  ,தனியார் ஓட்டல்

இதை தொடர்ந்து இந்த நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைவருக்கும் பெரும் ஆச்சரியமளிக்கும் வகையில் தஞ்சை ரெயில் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சிறப்பு சலுகையாக இன்று பிரியாணி வாங்க வரும் முதல் 75 நபர்களுக்கு 75 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என சலுகை அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இச்சிறப்பு சலுகையை முன்னிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் இன்று காலை முதலே அந்த ஓட்டலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த ஓட்டலில் கூட்டமாக கூட்டமாக மக்கள் கூட்டம் அலை மோதியது.

Tags :