Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

By: Karunakaran Sat, 01 Aug 2020 1:51:07 PM

டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

இன்று இஸ்லாமியர்களால் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க துணிந்த மற்றும் இறைவனின் விருப்பத்துக்கு கீழ்படிந்த, ஒரு சிறந்த தியாகமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்பதை பறைசாற்றும் வகை இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறைத்தூதர் இப்ராஹிம் இறை கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை இறைவனுக்காக தியாகம் செய்ய துணிந்ததை நினைவுகூரும் வகையில் இஸ்லாமிய பெருமக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

delhi jumma mosque,islamists,special prayer,human space ,டெல்லி ஜும்மா மசூதி, இஸ்லாமியவாதிகள், சிறப்பு பிரார்த்தனை, மனித இடைவெளி

இன்று பக்ரீத் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக டெல்லி ஜும்மா மசூதியில் தனி மனித இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். ஊரடங்கு கட்டுப்பாட்டால் தமிழகத்தில் வீடுகளிலிருந்தே இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவை பின்பற்றப்படுகிறது.

Tags :