Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 13-ஏ சட்டத்திருத்தம் அமல்படுத்துவது குறித்து வரும் 8ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை

13-ஏ சட்டத்திருத்தம் அமல்படுத்துவது குறித்து வரும் 8ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை

By: Nagaraj Sat, 28 Jan 2023 09:46:32 AM

13-ஏ சட்டத்திருத்தம் அமல்படுத்துவது குறித்து வரும் 8ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை

கொழும்பு: நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை... இலங்கையில் தமிழா்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஏ சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது என்றும், இதை முழுவதுமாக அமல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் பிப். 8-ஆம் தேதி சிறப்பு உரை நிகழ்த்தப்படும் என்றும் அதிபா் ரணில் விக்ரமசிங்க அறிவித்தாா்.

இலங்கை தமிழா் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டம் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறுகிறது. இலங்கை நாடாளுமன்ற தலைவா், பிரதமா், முன்னாள் அதிபா்கள் மகிந்த ராஜபட்ச, சிறீசேனா, தமிழ் தேசிய கூட்டணி தலைவா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபா் ரணில் விக்ரமசிங்க, ‘தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு அளிக்கும் 13-ஏ பிரிவு சட்டத்திருத்தம் இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தில் ஏற்கெனவே இடம் பெற்றுவிட்டது.

army,occupation,settlement,autonomy,tamils ,ராணுவம், ஆக்கிரமிப்பு, தீர்வு, தன்னாட்சி அதிகாரம், தமிழர்கள்

இதை முழுமையாக அமல்படுத்த வேண்டியது அதிபராகிய எனது பொறுப்பு. இதை அமல்படுத்த விரும்பவில்லை என்றால் அந்தச் சட்டத்தை நீக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் ஒற்றையாட்சி நடைபெறுகிறது. கூட்டாட்சிக்கு நான் எதிரானவன். ஏனென்றால், இலங்கை மாகாண கவுன்சில்களுக்கு லண்டன் மாநகராட்சிகளைவிட குறைந்த அதிகாரம்தான் உள்ளது.

இலங்கைத் தமிழா்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் 13-ஏ சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த பிப்ரவரி 8-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை நிகழ்த்துவேன். ராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழா் நிலங்களை விடுவிப்பது உள்ளிட்ட தமிழா்கள் பிரச்னைகளுக்கும் அதில் தீா்வு காணப்படும் என்றாா்.

Tags :
|