Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வருகிற 28-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்

தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வருகிற 28-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்

By: vaithegi Wed, 26 Apr 2023 2:35:11 PM

தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வருகிற 28-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: விடுமுறையை கொண்டாட மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்கு ஏற்ப வருகிற 28-ம் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையடுத்து இச்சிறப்பு ரயில் தாம்பரத்திலிருந்து வருகிற 28-ம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (06051), மறுநாள் காலை 7.45 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

special train,: holiday , சிறப்பு ரயில்,: விடுமுறை

எனவே அதன்படி தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இறுதியாக காலை 7.45 மணியளவில் கன்னியாகுமரியை சென்றடைகிறது.

மேலும் இந்த ரயிலில் 14 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும் 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. 18 பெட்டிகளை கொண்ட இச்சிறப்பு கட்டண ரயிலில் 14 பெட்டிகள் வழக்கமான படுக்கை வசதிகளை கொண்டுள்ளது.

Tags :