நாளை (மார்ச் 5) சிறப்பு ரயில் இயக்கம்
By: vaithegi Sat, 04 Mar 2023 9:34:00 PM
சென்னை: பொதுவாக, பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது என்பது உண்டு.
அந்த வகையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாளை (மார்ச் 5) சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது.
அதாவது, தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான வட மாநிலத்தவர்கள் குவிந்துள்ளனர். இதையடுத்து இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக நாளை கோவையிலிருந்து பாட்னா வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலில் 10 முன்பதிவு பெட்டிகள் மற்றும் 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.