Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பக்தர்களின் வசதிக்காக இதன் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பக்தர்களின் வசதிக்காக இதன் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

By: vaithegi Wed, 16 Nov 2022 4:08:40 PM

பக்தர்களின் வசதிக்காக இதன் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

திருப்பூர்: சிறப்பு ரயில் இயக்கம் .... சபரிமலை பக்தர்களின் வசதிக்காக, ஐதராபாத் – கொல்லம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 12 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் மாலை 6 மணிக்கு வந்தடையும்.

இதனை அடுத்து நவம்பர் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) இந்த ரயில் கொல்லத்தில் இருந்து இரவு 8:45 மணிக்கு புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

special train,devotee ,சிறப்பு ரயில்,பக்தர்

இதையடுத்து இந்த சிறப்பு வழித்தடத்தில் காயங்குளம், மாவேலிக்கரா, செங்கனூர், திருவல்லா, செங்கனஞ்சேரி, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் அவர்கள் தெரிவித்தனர்.

Tags :