Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்; ரயில்வே வாரியம் அறிவிப்பு

வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்; ரயில்வே வாரியம் அறிவிப்பு

By: Nagaraj Sat, 30 May 2020 12:10:13 PM


வரும் 1ம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்; ரயில்வே வாரியம் அறிவிப்பு

தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள்... வரும் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது:

ஜூன் 1ம் தேதி முதல் சென்னையை தவிர்த்து 4 வழித்தடங்களில் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

trains,intercity,express,jan sadafti,will be operated ,ரயில்கள், இண்டர்சிட்டி, எக்ஸ்பிரஸ், ஜன் சதாப்தி, இயக்கப்படும்

இதையடுத்து கோவை -காட்பாடி, கோவை -மயிலாடுதுறை மதுரை -விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில் ஆகிய நகரங்களுக்கிடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

திருச்சி- நாகர்கோவில் இடையே இயக்கப்படும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் செவ்வாய்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். இவ்வாறு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|