Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யஸ்வந்த்பூர் – நெல்லை, மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

யஸ்வந்த்பூர் – நெல்லை, மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Sat, 01 Oct 2022 6:41:02 PM

யஸ்வந்த்பூர் – நெல்லை, மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள்  இயக்கம்

சென்னை: சிறப்பு ரயில்கள் இயக்கம் ... தமிழகத்தில் வருகிற ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதனால் இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

எனவே அதன்படி பெங்களூரு அருகே உள்ள யஸ்வந்த்பூர் – நெல்லை, மைசூர் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யஸ்வந்த்பூர் – நெல்லை சிறப்பு ரயில் வருகிற 4 மற்றும் 11ம் தேதிகளில் யஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

special trains,ayuda puja ,சிறப்பு ரயில்கள்,ஆயுத பூஜை

இதனை அடுத்து இந்த ரயில், அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும் எனவும் அதன்பிறகு அக்டோபர் 5 மற்றும் 12ம் தேதிகளில் நெல்லையில் இருந்து இச்சிறப்பு ரயில் காலை 10.40 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறுதியாக அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு அதாவது அக்டோபர் 6 மற்றும் 13ம் தேதிகளில் யஸ்வந்த்பூரை வந்தடைகிறது என தெற்கு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சிறப்பு ரயில் நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், விருதுநகர், கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :