Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தைப்பூசம் ... திருத்தணிக்கு 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தைப்பூசம் ... திருத்தணிக்கு 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

By: vaithegi Fri, 03 Feb 2023 6:19:32 PM

தைப்பூசம்    ... திருத்தணிக்கு 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டு பிப். 5ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தைப்பூசத்தன்று முருகனை வழிபட்டால் தீயது அகன்று நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதையடுத்து இந்த தைப்பூச திருவிழாவின் நிகழ்வுகளில் ஒன்றான சுவாமி திருக்கல்யாணம் இன்று பழனியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாளை மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. எனவே இதனை காண ஏராளமான பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரையாக வந்த வகையில் உள்ளனர்.

special trains,thaipusam,tiruthani ,சிறப்பு ரயில்கள்,தைப்பூசம்    ,திருத்தணி

பழனி கோயிலில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் திருக்கோயிலிலும் தைபூசத்தை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Tags :