Advertisement

செங்கல்பட்டில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு

By: vaithegi Tue, 07 Mar 2023 6:31:13 PM

செங்கல்பட்டில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு .... தமிழகத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

எனவே இதன் வாயிலாக படித்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வணிகம், விற்பனை, சேவை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 10ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

private sector employment,chengalpattu ,தனியார் துறை வேலைவாய்ப்பு ,செங்கல்பட்டு

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்பில் இந்த முகாமானது செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை அருகில் உள்ள CSI மகிமை இல்லத்தில் மார்ச் 10-ம் தேதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த முகாமில் பங்கேற்க வரும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தகுதியும், விருப்பமும் உடைய மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Tags :