Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்மீகத்தையும் திராவிடத்தையும் பிரிக்க முடியாது... அமைச்சர் பெருமிதம்

ஆன்மீகத்தையும் திராவிடத்தையும் பிரிக்க முடியாது... அமைச்சர் பெருமிதம்

By: Nagaraj Wed, 05 July 2023 3:44:22 PM

ஆன்மீகத்தையும் திராவிடத்தையும் பிரிக்க முடியாது... அமைச்சர் பெருமிதம்

சென்னை; தமிழ்நாட்டில், இனி திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில், இனி திராவிடத்தையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது என்றும், காவி அணிந்தவர்கள் எல்லாம் தங்கள் எதிரிகள் அல்ல என்றும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

spirituality,dravidian,inseparable,priests,ministers ,ஆன்மீகம், திராவிடம், பிரிக்க முடியாது, அர்ச்சகர்கள், அமைச்சர்கள்

மதுரை அண்ணாநகரில், திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற பெரியாரின் எண்ணத்தை நிறைவேற்றி ஆன்மீக சாதனை படைத்தவர் கலைஞர் கருணாநிதி என புகழாரம் சூட்டினார்.

Tags :