Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இண்டியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் ..செய்தித் தொடர்பாளர் தகவல்

இண்டியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் ..செய்தித் தொடர்பாளர் தகவல்

By: vaithegi Mon, 04 Sept 2023 10:46:15 AM

இண்டியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது தொடர்பாக ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் ..செய்தித் தொடர்பாளர் தகவல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. மத்திய பாஜக அரசு மாற்றப்பட வேண்டும். எனவே அதற்கு காங்கிரஸ்தான் மாற்று என்ற எண்ணத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உறுதியுடன் இருக்கிறார். மேலும், ராகுல் காந்தியுடன் இணக்கமாகவும் இருக்கிறார்.

இதையடுத்து வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் வருகிற 5-ம் தேதிக்குள் தமிழகம் திரும்பத் திட்டமிட்டு உள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது பற்றி அவர் தமிழகம் வந்த பின்னர் முடிவு செய்யப்படும்.

Tags :