Advertisement

முள்ளெலிகள் வாயிலாக சால்மோனெல்லா தொற்றுநோய் பரவல்

By: Nagaraj Tue, 10 Nov 2020 3:41:15 PM

முள்ளெலிகள் வாயிலாக சால்மோனெல்லா தொற்றுநோய் பரவல்

முள்ளெலிகள் வாயிலாக தொற்றுநோய்... முள்ளெலிகள் மூலம் சால்மோனெல்லா தொற்றுநோய் பரவிவருவதாக, பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இந்தச் சமீபத்திய தொற்றுநோய்கள் குறித்து விசாரித்து வருவதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோய்வாய்ப்பட்டவர்களில் பலர் நோய்வாய்ப்படுவதற்கு முன்பு முள்ளெலிகளுடன் இருந்ததாகவும், அவர்கள் செல்லப் பிராணிகளைச், செல்லப்பிராணிகள் கடைகள், வளர்ப்பவர்கள் மற்றும் இணைய விற்பனையாளர்கள் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து வாங்குவதாகவும் தெரிவித்தனர்.

hedgehogs,public health institute,infections,people ,முள்ளெலிகள், பொது சுகாதார நிறுவனம், தொற்று, மக்கள்

நவம்பர் 6ஆம் திகதி வரை, கனடாவில் அல்பர்ட்டாவில் நான்கு, சஸ்காட்செவனில் ஒரு தொற்று மற்றும் கியூபெக்கில் ஆறு தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 2019ம் ஆண்டு முதல் ஒகஸ்ட் 2020ஆம் ஆண்டு வரை மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் வயது இரண்டு மாதங்கள் முதல் 63 வயது வரை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சால்மோனெல்லா தொற்றால் இதுவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களோ இறப்புகளோ ஏற்படவில்லை.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம், முள்ளெலிகள் இருந்த மேற்பரப்பு அல்லது உருப்படியைத் தொட்டால் கூட மக்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளது.

Tags :