Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இலங்கை சிறப்பாக செயல்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இலங்கை சிறப்பாக செயல்பட்டுள்ளது

By: Nagaraj Tue, 16 June 2020 8:49:57 PM

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இலங்கை சிறப்பாக செயல்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இலங்கை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று சமூகத்தில் பரவவிடாமல், சிறப்பாக கையாண்ட நாடுகளின் வரிசையில் இலங்கையும் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிஸ் தெரிவித்தார். கொரோனா தொற்று சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

corona,spread,sri lanka,controlled,us ambassador ,கொரோனா, பரவல், இலங்கை, கட்டுப்படுத்தியது, அமெரிக்க தூதுவர்

இவ்விடயம் தொடர்பாக அலைனா டெப்லிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம், மிகவும் சிறப்பான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

உலகின் சில நாடுகள், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பான எச்சரிக்கையை செவிமடுக்காமல், கொரோனாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் அலையை எதிர்நோக்கும் அபாயத்தில் காணப்படுகின்றன.

எனினும், சமூகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய நாடுகளின் வரிசையில் இலங்கையும் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|
|