Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உயர்தர பரீட்சை தேதியை அறிவித்தது இலங்கை கல்வி அமைச்சு

உயர்தர பரீட்சை தேதியை அறிவித்தது இலங்கை கல்வி அமைச்சு

By: Nagaraj Tue, 21 July 2020 10:27:53 AM

உயர்தர பரீட்சை தேதியை அறிவித்தது இலங்கை கல்வி அமைச்சு

உயர்தரப் பரீட்சையானது தேதி வெளியானது... கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன நடைபெறவுள்ள திகதி உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி க.பொ.த உயர்தரப் பரீட்சையானது வருகின்ற அக்டோபர் 12 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கும் எனவும், ஐந்தாம் ஆண்டு புலைமைப் பரிசில் பரீட்சையானது வருகின்ற அக்டோபர் 11 ஆம் திகதியும் நடைபெறும்.

school,october,higher secondary examination,date,announcement ,பாடசாலை, அக்டோபர், உயர்தர பரீட்சை, தேதி, அறிவிப்பு

இதுவேளை 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. அக்டோபர் 9 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பாடசாலைகள் திறக்கப்படாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|