Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

By: Nagaraj Thu, 22 Dec 2022 10:22:29 AM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

நாகை: 11 மீனவர்களை கைது செய்தனர்... கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகையில் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.

tamil nadu fishermen,11 arrested,nagai,crossed the border ,தமிழக மீனவர்கள், 11 பேர், கைது, நாகை, எல்லை தாண்டியதாக

இந்த நிலையில், எல்லை தாண்டி கடலில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் 11 நாகை மீனவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும், 11 தமிழக மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|