எரிபொருளுக்கு தட்டுப்பாடில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தகவல்
By: Nagaraj Wed, 18 Jan 2023 10:54:08 AM
கொழும்பு: எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை... நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், QR முறைமையை பின்பற்றாத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றின் சேவைகளை இடைநிறுத்துவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, எரிபொருள் முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Tags :
delivery |
fuel |