Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக மீனவர்கள் 17 பேரை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

தமிழக மீனவர்கள் 17 பேரை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

By: Nagaraj Thu, 28 Sept 2023 07:11:10 AM

தமிழக மீனவர்கள் 17 பேரை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

இலங்கை: நிபந்தனையுடன் விடுதலை... இலங்கையில் தமிழக மீனவர்கள் 17 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 10 வருடத்திற்கு ஒத்திவைத்து நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்தது.

ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்கள், கடந்த 13-ம் தேதி 3 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

adjournment,stipulation,fishermen,release,trial,affect ,ஒத்திவைப்பு, நிபந்தனை, மீனவர்கள், விடுதலை, விசாரணை, பாதிப்பு

அவர்கள் அனைவரும் கடந்த 14-ம் தேதி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்தது, கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில், 17 மீனவர்களுக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த நீதிமன்றம், தண்டனையை 10 வருடத்திற்கு ஒத்திவைத்து நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்தது.

Tags :
|