Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோடியக்கரை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

கோடியக்கரை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

By: Nagaraj Wed, 23 Aug 2023 11:50:04 PM

கோடியக்கரை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம்: நாகை மீனவர்கள் மீது தாக்குதல்... கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த வைத்தியநாதசுவாமி, ராமராஜன், செல்வராஜ் ஆகியோரை தாக்கிய கடற்கொள்ளையர்கள், ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

fishermen,attack,bandits,hospital,nagai ,மீனவர்கள், தாக்குதல், கொள்ளையர்கள், மருத்துவமனை, நாகை

நேற்று ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகளில் வந்த கொள்ளையர்கள் 6 பேர் அரிவாளை காட்டி மிரட்டி பொருட்களை பறித்து சென்றதாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags :
|