Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

By: Nagaraj Sat, 15 Oct 2022 9:43:28 PM

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

காரைக்கால்: புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி பிடிபடுகின்றனர்.


இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இப்பிரச்னை நீண்ட நாட்களாக நீடித்து வந்தாலும், இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.

brutality,fishermen,sri lankan,tamil nadu , இலங்கை, எல்லை தாண்டி, தமிழக மீனவர்கள், மீன்பிடிப்பதாக

இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் இன்று நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 4 படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கினர். மேலும், மீனவர்களின் வலைகளை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுவிட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Tags :