- வீடு›
- செய்திகள்›
- வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர் கோரிக்கை நிறைவேற்றப்படும்
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர் கோரிக்கை நிறைவேற்றப்படும்
By: Nagaraj Sun, 31 May 2020 4:46:09 PM
கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகள் பலவற்றில் இலங்கையர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் தாயம் திரும்ப நினைக்கின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரொனா பரவலை அடுத்து நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நாடுகள் விமான நிலையங்களைக் கூட இன்னும் திறக்கவில்லை.
தற்போது வழமையான விமான சேவைகள் இடம்பெறாத நிலையும் உள்ளது. இவ்வாறான நிலையில் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
எப்படி இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.