- வீடு›
- செய்திகள்›
- பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம்; ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை
பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடக்கம்; ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை
By: Monisha Tue, 22 Sept 2020 09:02:32 AM
1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை கொரோனா தாக்கம் குறையாததால் பள்ளிகளுக்கு விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது. எனவே மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று முதல் செப்டம்பர் 25-ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.