பொன்விழாவை நோக்கி புதுப்பயணம் தொடங்குவோம்; ஓபிஸ்-இபிஸ் அறிக்கை
By: Monisha Fri, 16 Oct 2020 12:52:47 PM
அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தொண்டர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பொன்விழாவை நோக்கி புதுப்பயணம் தொடங்குவோம் என்று கூறி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாளை அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்படுவதையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
இத்தனை ஆண்டுகளாக அ.தி.மு.க-வுக்காக உழைத்த, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி. பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை படைப்போம்.
கட்சி தொண்டர்கள் 2021 சட்டசபை தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும். அதிமுகவின் பொன்விழா ஆண்டில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான சாதனையை படைப்போம். பொன்விழாவை நோக்கி புதுப்பயணம் தொடங்குவோம். அதிமுக பொற்கால ஆட்சி தொடர சூளுரைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.