Advertisement

இன்று முதல் ஆரம்பம்... சோதனை அடிப்படையில் 5ஜி சேவை

By: Nagaraj Wed, 05 Oct 2022 8:56:02 PM

இன்று முதல் ஆரம்பம்... சோதனை அடிப்படையில் 5ஜி சேவை

புதுடெல்லி: மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.

5ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி இச்சேவையைத் தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் 4 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது.

5g service,jio,not required,statement ,5ஜி சேவை,ஜியோ, புதிய சிம், தேவையில்லை, அறிக்கை

அந்த வகையில் மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையிலான 5ஜி சேவையை தொடங்கவுள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.


மேலும் இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 4 நகரங்களில் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை என தெரிவித்துள்ளது.

Tags :
|