Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம்

கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம்

By: Nagaraj Sun, 02 Oct 2022 11:11:31 PM

கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம்

கரூர்: கரூரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அமைப்பின் மாநில பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

கரூர் மாவட்ட செயலாளர் அருள் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக்கூட்டத்தில் அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ தனியரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் தனியரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுயதாவது: அதிமுகவில் ஓபிஎஸ் பாதிக்கப்பட்டு இருக்கிறார். விதிப்படி, சட்டப்படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தான்.

support,democratic honour,independent government,aiadmk,ops ,ஆதரவு, ஜனநாயக மாண்பு, தனியரசு, அதிமுக, ஓ.பி.எஸ்.

ஏற்கனவே அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட இரட்டை தலைமையை மறந்து, பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ்-ஐ வஞ்சித்து ஒற்றை தலைமை கோட்பாட்டை கொண்டு வந்தார் எடப்பாடி. தற்போது ஒற்றை தலைமை குறித்து நீதிமன்றங்களை நாடி வருகின்றனர். தற்போது தலைமை பொறுப்பிற்காக அதிமுக ஊசலாடுகிறது. ஓபிஎஸ்-ஐ போலவே சசிகலாவும், தினகரனும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்களுக்கும் ஆதரவளிக்கிறேன்.

மீண்டும் நான்கு பேரும் இணைந்து செயல்பட்டால் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தது போல, அதிமுக மிகவும் வலுவான கட்சியாக இருக்கும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி ஜனநாயக மாண்பை மறந்து சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு, அதிமுகவை அளிக்க நினைக்கிறார். அதனால் அவருக்கு எனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன் என்று தனியரசு பேசினார்.

Tags :
|