Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநில வாரியாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளவர்களின் நிலவரம்!

மாநில வாரியாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளவர்களின் நிலவரம்!

By: Monisha Fri, 29 May 2020 12:39:13 PM

மாநில வாரியாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளவர்களின் நிலவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக உள்ளது. இதற்கிடையே ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களால் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதால் அவர்கள் அங்கு தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள். இதேபோல் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் அழைத்து வரப்படும் இந்தியர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்படுகிறார்கள்.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடந்த புதன்கிழமை வரை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 91 லட்சம் பேர் ரெயில், பஸ்கள் மூலம் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ், 40 நாடுகளில் இருந்து 30 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 60 நாடுகளில் இருந்து 1 லட்சம் பேர் அழைத்து வரப்பட இருக்கிறார்கள்.

இப்படி ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சென்றவர்களும், வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களும் அரசு ஏற்பாடு செய்துள்ள இடங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 26-ந் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 22 லட்சத்து 81 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

india,corona virus,isolation,maharashtra,gujarat ,இந்தியா,கொரோனா வைரஸ்,தனிமைப்படுத்தல்,மஹாராஷ்டிரா,குஜராத்

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 லட்சத்து 2 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத்தில் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். உத்தரபிரதேசத்துக்கு திரும்பிய 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். பீகாரில் 2 லட்சத்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 1 லட்சத்து 86 ஆயிரம் பேரும், ஒடிசாவில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேரும், ஜார்கண்டில் 88 ஆயிரத்து 536 பேரும், பஞ்சாபில் 37 ஆயிரத்து 618 பேரும், காஷ்மீரில் 30 ஆயிரத்து 983 பேரும், இமாசலபிரதேசத்தில் 25 ஆயிரத்து 238 பேரும், ராஜஸ்தானில் 19 ஆயிரத்து 418 பேரும், ஆந்திராவில் 14 ஆயிரத்து 930 பேரும், அசாமில் 13 ஆயிரத்து 941 பேரும், யூனியன் பிரதேசமான லடாக்கில் 13 ஆயிரத்து 538 பேரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 14-ந் தேதி வரை இப்படி தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களில் லட்சக்கணக்கான பேர் 7 அல்லது 14 நாட்கள், தனிமைப்படுத்துதலை முடித்து வீடு திரும்பி இருக்கிறர்கள். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Tags :
|