ஏப்ரல்-மே வரை நான்கு சதவீதம் கஞ்சா விற்பனை அதிகரித்ததாக புள்ளிவிபரம்
By: Nagaraj Fri, 24 July 2020 7:56:22 PM
கஞ்சா விற்பனை அதிகரிப்பு... சில்லறை கஞ்சா விற்பனை ஏப்ரல் முதல் மே வரை நான்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக, புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கஞ்சா விற்பனை மூலம் 186 மில்லியன் டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், ஒன்ராறியோவின் மதுபான மற்றும் சூதாட்ட விளையாட்டு ஆணையம் கிட்டத்தட்ட 50 புதிய கஞ்சா சில்லறை விற்பனையாளர்களுக்கு அங்கீகாரம் அளித்தது.
மற்ற மாகாணங்களும் இந்த ஆண்டு புதிய சில்லறை விற்பனையாளர்களுக்கு தொடர்ந்து
அங்கீகாரம் அளித்துள்ளன. அல்பர்ட்டாவில், மாகாணத்தில் 500க்கும் மேற்பட்ட
கஞ்சா வழங்குநர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இது செப்டம்பர் மாதம் முதல்
200க்கும் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் ஏப்ரல் முதல் மே வரை நான்கு
சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.