ஊரடங்கால் ரஷ்யாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை
By: Nagaraj Fri, 22 May 2020 4:56:55 PM
ரஷ்யாவில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ரஷ்யாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
corona |
overseas |
russia |