Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வந்தே பாரத் ரயில் மீது இரண்டாவது முறையாக கல்வீச்சு தாக்குதல்

வந்தே பாரத் ரயில் மீது இரண்டாவது முறையாக கல்வீச்சு தாக்குதல்

By: Nagaraj Mon, 09 Jan 2023 11:35:57 PM

வந்தே பாரத் ரயில் மீது இரண்டாவது முறையாக கல்வீச்சு தாக்குதல்

கொல்கத்தா: கவுரா – நியூ ஜல்பைஹூரி இடையே வந்தேபாரத் ரயில் மீது இரண்டாவது முறையாக கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


கடந்த டிசம்பர் 30 அன்று, கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலம் கவ்ரா – நியூ ஜல்பைஹூரி இடையே வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தேபாரத் ரயில் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

பீகார் வழியாக சென்ற ரயில் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கவுரா – நியூ ஜல்பைஹூரி இடையே வந்தேபாரத் ரயில் மீது இரண்டாவது முறையாக கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

kolkata,pelted stones,vandebharat train, ,
கல்வீச்சு, கொல்கத்தா, வந்தே பாரத் ரயில்

பாலோபூர் பகுதியில் ரயில் வந்த போது சிலர் அதன் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.இரண்டாவது முறையாக இது போன்ற சம்பவம் நடப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல் வீச்சுத் தாக்குதலில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது

Tags :