வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு நடத்தப்பட்டதால் பரபரப்பு
By: Nagaraj Sun, 12 Mar 2023 9:51:33 PM
ஹவுரா: மீண்டும் கல்வீச்சு... இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவதும், இந்த அதிவேக ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், வந்தே பாரத் ரயில் மீது அவ்வப்போது கல் வீச்சு சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் மீண்டும் கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் திடீரென கற்களை வீசித் தாக்கினர்.
இந்த கல்வீச்சு தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், ரயிலின் ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.