Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுரங்கப்பாதையில் கையசைப்பதை நிறுத்திவிட்டு கேள்விக்கு பதில் அளியுங்கள் - பிரதமர் மோடி

சுரங்கப்பாதையில் கையசைப்பதை நிறுத்திவிட்டு கேள்விக்கு பதில் அளியுங்கள் - பிரதமர் மோடி

By: Karunakaran Thu, 08 Oct 2020 3:55:56 PM

சுரங்கப்பாதையில் கையசைப்பதை நிறுத்திவிட்டு கேள்விக்கு பதில் அளியுங்கள் - பிரதமர் மோடி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்கட்சியினரும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டு இருந்த ராகுல் காந்தி பேட்டி அளிக்கையில், ஒரு குழந்தை கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த நிர்வாகமும் அவரது குடும்பத்தையே தாக்கி வருகிறது. நாட்டின் பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று கூறினார்.

stop signing,tunnel,rahul gandhi,modi ,கையசைப்பது, சுரங்கப்பாதை, ராகுல் காந்தி, மோடி

மேலும் அவர், இந்த சம்பவத்தில் சர்வதேச சதி இருப்பதாக மாநில அரசு கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, ‘யோகிஜி தனது கருத்தை கூறியிருக்கிறார். நான் அங்கு பார்த்தது என்னவென்றால், ஒரு அருமையான சிறுமி கற்பழித்து, கழுத்து உடைக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதை செய்த நபர்கள், அவரது குடும்பத்தையும் மிரட்டி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி, அடல் சுரங்கப்பாதையில் தனியாக கையசைப்பதை நிறுத்திவிட்டு, மவுனத்தை கலைக்க வேண்டும். நாடு உங்களிடம் ஏராளமான கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு பதில் அளியுங்கள் என்று தெரிவித்தார்.

Tags :
|