Advertisement

நாகை, காரைக்காலில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

By: Nagaraj Sun, 25 Dec 2022 9:32:23 PM

நாகை, காரைக்காலில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனால் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இயக்கப்பட்டுள்ளது.

heavy rain,tamil nadu,warning, ,எச்சரிக்கை, கனமழை, தமிழகம்

மேலும், சென்னையை பொறுத்த வரையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இரவு முழுவதும் மழை பெய்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.


குறிப்பாக மெரினா, பட்டினம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.


Tags :