Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வலுவடைகிறது போராட்டம்; டெல்லியை நோக்கி செல்லும் ஏராளமான பஞ்சாப் விவசாயிகள்

வலுவடைகிறது போராட்டம்; டெல்லியை நோக்கி செல்லும் ஏராளமான பஞ்சாப் விவசாயிகள்

By: Nagaraj Fri, 11 Dec 2020 2:33:14 PM

வலுவடைகிறது போராட்டம்; டெல்லியை நோக்கி செல்லும் ஏராளமான பஞ்சாப் விவசாயிகள்

டெல்லியை நோக்கி விரையும் விவசாயிகள்... போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் பஞ்சாப்பில் இருந்து இப்போது மேலும் ஏராளமான விவசாயிகள் டெல்லி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி வடமாநில விவசாயிகள் டெல்லியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 16-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. இதற்காக விவசாய பிரதிநிதிகளிடம் இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது.

3 சட்டங்களிலும் பல திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முன்வந்தது. குறிப்பாக 7 அம்ச சமரச திட்டங்களை மத்திய அரசு முன்வைத்தது. ஆனால் அதை விவசாயிகள் ஏற்கவில்லை. 3 சட்டங்களையும் கண்டிப்பாக வாபஸ் பெற்றே தீரவேண்டும் என்று கூறி வருகிறார்கள். அந்த பிரச்சினைக்கு 10-ந் தேதிக்குள் (நேற்று) தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கெடு விதித்திருந்தனர்.

நேற்றுடன் அவர்களுடைய கெடு முடிந்தது. இதனால் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கி இருக்கிறார்கள். 14-ந் தேதி டெல்லியை முழுமையாக முற்றுகையிடப் போவதாகவும், டெல்லிக்கு வரும் அனைத்து சாலைகளையும் முற்றுகையிடப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் டெல்லி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags :
|
|