இந்தோனேசியாவுக்கு அடுத்ததாக சாலமன் தீவில் கடும் நிலநடுக்கம்
By: Nagaraj Tue, 22 Nov 2022 7:31:30 PM
சாலமன் தீவு: இந்தோசியாவுக்கு அடுத்ததாக சாலமன் தீவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.
இதனை அடுத்து பெரும்பாலும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும், சில நேரங்களில் பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெரிய அளவில் உயிர் சேதங்களை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.இதையடுத்து இந்நிலையில், சாலமன் தீவுகளில் உள்ள தெற்கு மலாங்கோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட
கட்டிங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி
கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும்
தஞ்சம் புகுந்தனர்.
சாலமன் தீவுகளில் சக்தி
வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த
நிலையில் சாலமன் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.