Advertisement

ஆயிரம் ரூபாய் சம்பள விஷயமாக ஹட்டனில் போராட்டம்

By: Nagaraj Sun, 06 Dec 2020 5:13:36 PM

ஆயிரம் ரூபாய் சம்பள விஷயமாக ஹட்டனில் போராட்டம்

ஹட்டனில் போராட்டம்... பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் அரசாங்கம் தொழிலாளர்களை ஏமாற்ற வேண்டாம் என கோரி ஹட்டனில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜே.வி.பியின் தொழிற்சங்கமான அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தினால் இந்தப் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டன் நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.

struggle,hutton,health practice,1000 rupees salary ,போராட்டம், ஹட்டன், சுகாதார நடைமுறை, 1000 ரூபாய் சம்பளம்

ஏமாற்ற வேண்டாம், வரவு செலவு திட்டத்தில் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உள்வாங்கு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் போன்ற பல்வேறு வசனங்கள் எழுதிய பதாதைகளை போராட்டக்காரர்கள் இதன்போது கைகளில் ஏந்தியிருந்தனர்.

அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் கிட்ணன் செல்வராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, நுவரெலியா மாவட்ட ஆசிரியர் சங்க செயலாளர் மஞ்சுள சுரவீர முன்னெடுத்தார்.

கொரோனா வைரஸ் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடைவெளிகளை கடைப்பிடித்து 15 உறுப்பினர்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|