Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மங்களூருவில் ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி மாணவி உலக சாதனை

மங்களூருவில் ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி மாணவி உலக சாதனை

By: Karunakaran Thu, 17 Sept 2020 12:12:09 PM

மங்களூருவில் ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி மாணவி உலக சாதனை

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த கோபட்கர் - சுமா பட்கர் தம்பதியின் மகள் ஆதிஸ்ரூபா, கோபட்கர் நடத்தி வரும் கல்வி பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இந்த பயிற்சி மையத்தில் படித்து வருபவர்களுக்கு தனித்திறனை வளர்த்து கொள்வதற்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆதிஸ்ரூபாவுக்கும் இரு கைகளையும் பயன்படுத்தி எழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆதிஸ்ரூபா அந்த பயிற்சியை ஆர்வத்துடன் கற்று வந்தார். தற்போது 2 கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி எழுதி வருகிறார். அதாவது வலது கையில் எழுதும் வார்த்தையை, இடது கையையும் பயன்படுத்தி எழுதி வருகிறார். இதனை அறிந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மங்களூருவுக்கு வந்து, ஆதிஸ்ரூபாவுக்கு 2 கைகளை பயன்படுத்தி எழுதும் தேர்வை நடத்தியது.

student,world record,45 words,mangalore ,மாணவர், உலக சாதனை, 45 வார்த்தைகள், மங்களூர்

இந்த தேர்வில் ஆதிஸ்ரூபா ஒரு நிமிடத்தில் இரு கைகளை பயன்படுத்தி 45 வார்த்தைகளை எழுதி சாதனை படைத்தார். இதனை பார்த்த ஆச்சரியம் அடைந்த உத்தர பிரதேச கல்வி நிறுவனத்தினர், ஆதிஸ்ரூபாவை வெகுவாக பாராட்டி அவருக்கு விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 25 வார்த்தைகள் எழுதியதே இதற்கு முன்பு உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஆதிஸ்ரூபா தகர்த்துள்ளார்.

இதுகுறித்து ஆதிஸ்ரூபா கூறுகையில், எங்கள் கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்கள் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் பாடங்களை படிப்பார்கள். மற்ற நேரங்களில் எங்களது தனித்திறனை வளர்க்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படும். கடவுள் எனக்கு 10 விரல்கள் கொடுத்து உள்ளார். அந்த விரல்களை வைத்து நான் இன்னும் நிறைய சாதனை படைக்க திட்டமிட்டு உள்ளேன் என்று கூறினார். இந்நிலையில், ஆதிஸ்ரூபா இரு கைகளை பயன்படுத்தி எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

Tags :