பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
By: vaithegi Thu, 04 May 2023 1:40:04 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியீடு ... தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 446 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன.
இதையடுத்து இந்த கல்லூரிகளில் 2022-23- ஆம் கல்வியாண்டு முடிந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் 12 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருக்கும் நிலையில் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கிவிட்டது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 2 லட்ச இடங்களுக்கு 1.50 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.