Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு மாணவர்கள் செப்.5-முதல்20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு மாணவர்கள் செப்.5-முதல்20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Tue, 05 Sept 2023 1:23:30 PM

தமிழ் இலக்கிய திறனறி தேர்வுக்கு மாணவர்கள் செப்.5-முதல்20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் மொழி இலக்கியத் திறனைமாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது.

அந்தவகையில், 2023-24-ம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு வருகிற அக்.15-ல் நடத்தப்பட உள்ளது.

tamil literature proficiency test,students ,தமிழ் இலக்கிய திறனறி தேர்வு,மாணவர்கள்

இதையடுத்து இந்த தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்விதுறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம்2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும்.

இந்த தேர்வுக்கு பிளஸ்-1 மாணவர்கள் www.dge.tn.gov.in என்றஇணையதளத்தில் செப்.5-முதல்20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,பூர்த்தி செய்து ரூ.50 கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அவரும் செப்.20-க்குள் ஒப்படைக்க வேண்டும்.

Tags :