- வீடு›
- செய்திகள்›
- பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் தொடரும் குளறுபடி.. தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்குமாறு மாணவர்கள் கோரிக்கை
பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வில் தொடரும் குளறுபடி.. தங்களுக்கு மறுவாய்ப்பு வழங்குமாறு மாணவர்கள் கோரிக்கை
By: vaithegi Tue, 23 Aug 2022 05:56:16 AM
புதுடெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு பொது நுழைவுத்தேர்வு (க்யூட்) நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடத்தப்பட்ட இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன.
இதனை அடுத்து இதில் முக்கியமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல நூற்றுக்கணக்கான மையங்களில் தேர்வு எழுத முடியாத நிலை ஒன்று ஏற்பட்டது. இதனால் அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த தேர்விலும் பில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் முக்கியமாக, தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் முடிந்த தேதியில் இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இதைப்போன்று உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பலரும் இந்த பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கின்றனர். எனவே தங்களுக்கு தேர்வு எழுத ஒரு மறுவாய்ப்பு வழங்குமாறு தேசிய தேர்வு முகமை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு அவர்கள் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.