Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களை அதிகரிக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு

காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களை அதிகரிக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு

By: Nagaraj Mon, 18 Sept 2023 6:34:19 PM

காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களை அதிகரிக்க மாணவர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை துவங்கி வருகிற செப்டம்பர் 27ம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

மேலும், 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி துவங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 27 ஆம் தேதி வரையிலும் நடைபெறயிருக்கிறது. இதற்கு இடையே, காலாண்டுத்தேர்வு முடிவடைந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

quarterly vacation,school,quarterly vacation,school,extension,notice ,காலாண்டு விடுமுறை ,பள்ளி, நீட்டிப்பு, அறிவிப்பு

அதேபோன்று, 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையிலும் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுவாகவே அனைத்து மாணவர்களுக்கும் 10 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்படும் நிலையில் இந்தாண்டு 5 நாட்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், காலாண்டு விடுமுறை தினத்தை அதிகரிக்க கோரி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அதன்படி, பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அதிகரிக்கப்படுமா என்று மாணவர்களின் மத்தியில் ஏறும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Tags :
|
|