Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு

By: vaithegi Fri, 03 Feb 2023 4:03:15 PM

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு

சென்னை: மாணவர்களின் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் தெரிவிக்கலாம் .... தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளில் பொதுத்தேர்வு நடைபெறுவதில் பல சிக்கல் இருந்தது. இந்த நிலையில் இந்தாண்டு பொதுதேர்வானது திட்டமிட்டபடி நடைபெற இருக்கிறது. மேலும் 10, 11,12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியும் வெளியாகி இருக்கிறது.

எனவே அதன் படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ம் முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரையும், 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையும் நடைபெற இருக்கிறது.

students,general examination ,மாணவர்கள் ,பொதுத்தேர்வு

அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அந்த மாணவர்களின் பட்டியல் தற்போது வெளியாகிருக்கிறது.

பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வருகிற பிப். 3-ம் தேதி முதல் பிப். 10-ம் தேதி வரை செய்யலாம் என்று அரசு தேர்வு இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Tags :