Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கிடு .. முதல்வருக்கு மாணவர்களின் நன்றி தெரிவிப்பு

பள்ளி வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கிடு .. முதல்வருக்கு மாணவர்களின் நன்றி தெரிவிப்பு

By: vaithegi Thu, 20 Oct 2022 3:17:01 PM

பள்ளி வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கிடு ..  முதல்வருக்கு மாணவர்களின் நன்றி தெரிவிப்பு

சென்னை: இன்றைய மாணவர்கள் தான் நாட்டின் நாளைய தலைவர்கள் என கூறி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பள்ளி மாணவர்களின் நலனிற்காக பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்த கூட்டத்தொடரில் பல துறைகளுக்கான மானிய ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகியாகியுள்ளது. அதில், பள்ளிக்கல்வித்துறைக்கு முதல்வர் ரூ.1050 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.

school development,m.k. stalin ,பள்ளி வளர்ச்சி ,முதல்வர்

இதனை அடுத்து முதல்வரின் இந்த அறிவிப்பிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பாராட்டி பேசியுள்ளார்.

இதையடுத்து அதில், தமிழக பள்ளிகளில் கட்டுமான பிரச்சனை மற்றும் வகுப்பறை பிரச்சனைகள் இருப்பதை அறிந்து தமிழ்நாட்டின் பள்ளி வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகளுக்கு கூடுதலாக ரூ.1,050 கோடி நிதி ஒதுக்கிடு செய்துள்ள முதல்வருக்கு தமிழக பள்ளி மாணவர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

Tags :