Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புறநகர் ரயில் சேவை இன்று 4 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது

புறநகர் ரயில் சேவை இன்று 4 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது

By: vaithegi Mon, 02 Oct 2023 10:07:26 AM

புறநகர் ரயில் சேவை இன்று 4 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது

சென்னை : சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில்கள் இன்று காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 வரை இயங்காது என்று அறிவிக்க[ப்பட்டுள்ளது. தாம்பரம், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள கோடம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையங்களில் 4 மணிநேர பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை காஞ்சி- கடற்கரை, கடற்கரை- தாம்பரம் மார்க்கத்தில் நாளை ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ள்ளன. செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே புறப்படும் ரயில்கள் காலை 10.55 முதல் மதியம் 1 மணி வரை இயங்காது.

suburban rail service,trains ,புறநகர் ரயில் சேவை ,ரயில்கள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று விடுமுறை என்பதால் ஞாயிறு அட்டவணைப்படி, கடற்கரை, செங்கல்பட்டு, அரக்கோணம், சூலூர்பேட்டை வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்து உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் வழித்தடங்களில் 41 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரையிலான ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை 41 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தென் மண்டல கோட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :